ஜெயலலிதா மரணத்தை அறிந்து அன்னூரில் தீக்குளித்த விவசாயி மரணம்!


தமிழக முதல்வர் கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்த் தமிழகதில் உள்ள அ.இ.அ.தி.மு.க.  தொண்டர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியும் மொட்டை அடித்தும், மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர் . 

இந்த நிலையில்,  கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவிற்குட்பட்ட ஆத்திகுட்டை பகுதியைச்சேர்ந்த அதிமுக வின் தீவிர விசுவாசியான விவசாயி ராமச்சந்திரன். ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து வீட்டின் வெளிப்புறத்தை பூட்டிவிட்டு சமையல் அறையில் இருந்த இரண்டு லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு  ஊருக்குள் வந்து தனது உடலில் ஊற்றி , தீ பற்ற வைத்துக்கொண்டார். 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை எடுத்து  ராமச்சந்திரன் மீது ஊற்றி அவரை காப்பாற்றினர். இதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டது உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயமடைந்த அவரை 108 அவசர ஊர்தி மூலம் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

யாருமே வரவில்லை!

ஜெயலலிதா-வின் மரணச்செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரனை பார்க்க அக்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வரவில்லை என்பது, ராமச்சந்திரனின் குடும்பத்தாருக்கு சொல்லிலடங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...