கோவையில் வசிக்கும் ஜெயலலிதாவின் பள்ளி தோழி பகிரும் நினைவுகள்!


மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பள்ளியில் பயின்ற தோழி  கோவையில் உள்ளார். அவர் தனது பழைய நினைவுகளை கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த முன்னாள் நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம் அவர்களின் மூத்த மகள் அனுராதா. தற்போது 70 வயதாகும் அனுராதா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று கோவை இடிகரையில் வசித்து வருகிறார். 



இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான பள்ளி வாழ்க்கை குறித்து  கூறியதாவது :- 

'நாங்கள் பிரசண்டேசன் கான்வெண்ட் சர்ச் பார்க் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நல்ல குணம் படைத்தவர் ஜெயலலிதா. படிப்பிலும் அப்படித்தான்.பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில்  அவருடன்  சேர்ந்து நடனம் ஆடியுள்ளேன். எப்போதும் சைவ உணவு வகைகளையே உண்ணும் பழக்கம் உள்ளவர் அவர். 

10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அவர் பி.யூ.சி படிப்புக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவரால் படிப்பை தொடரமுடியவில்லை. அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த போது நான் என் குடும்பத்தோடு சென்று படங்களை பார்ப்பேன். 

பள்ளியில் என்னுடன் எப்படி பேசி பழகினாரோ படங்களிலும் அவ்வாறே தெரிந்தார். அவரது நடிப்புத்திறமையை பார்த்து வியந்து போவேன். ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும் மிகவும் உடைந்து போனேன், ஈடுகட்ட முடியாத இழப்பு!'

 

ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் தனது சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் நம் 'அம்மா'வின் தோழி, அனுராதா.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...