கோவை, 48வது வார்டுக்குட்பட்ட ரத்தினபுரி 7வீதியில் திமுகவின் வட்ட செயலாளர் செல்வமணி என்பவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, ரத்தினபுரி பகுதியில் 48வது வார்டின் திமுகவின் வட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் செல்வமணி. இவர் அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறித்து அவதூறாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி அதிமுக மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிதி குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட அதிமுக வினர் 48வது வட்ட திமுக அலுவலகம் முன்பாக போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறு பேசிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை, ரத்தினபுரி பகுதியில் 48வது வார்டின் திமுகவின் வட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் செல்வமணி. இவர் அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறித்து அவதூறாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி அதிமுக மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிதி குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட அதிமுக வினர் 48வது வட்ட திமுக அலுவலகம் முன்பாக போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறு பேசிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.