மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் மீட்கப்பட்ட 26 வது மரம் "அரசமரம்"


கோவை - பொள்ளாச்சி சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ஓசை, சிறுதுளி, குறிச்சிக்குளம்  பாதுகாப்பு இயக்கம், பசுமை தேசம், ராக் அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள் இனைந்து மரங்களுக்கு மறுவாழ்வுப் பணியை மேற்கொண்டனர்.  இதன்மூலம் சாலை ஓரங்களில் உள்ள 25திற்கும் மேற்பட்ட மரங்களை மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. 



இந்நிலையில், பொள்ளாச்சி சாலையில் வெட்டப்படவிருந்த மரத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 26வது மரமாக அரசமரத்திற்கு மறுநடவு செய்யும் பணிகள் நேற்று காலை 8 மணி அளவில் துவங்கி, மாலை 5 மணிக்கு அரசமரம் மறுநடவு செய்யும் பணி நிறைபெற்றது. ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்ட இந்த மரத்தை வாகனத்தில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூடில் நடப்பட்டது. 



மரம் மீட்கப்படும் இடம் :-குறிச்சிக்குளம் அருகில் பொள்ளாச்சி சாலை.

மீட்கப்படும் மரம் :- அரசமரம்.

மரத்தின் வயது:- 45 வருடங்கள்.

மரத்தை மறுநடவு செய்யப்படும் இடம்:- ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூட் செட்டிபாளையம்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...