கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு பூம்புகாரில் விளக்கு திருவிழா கண்காட்சி

கோவை, பெரியகடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை மாதம் தீபம் பண்டிகையை முன்னிட்டு விளக்கு திருவிழா கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை இம்மாதம் துவங்கி உள்ளது. இதனை கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் மதுராந்தகி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.


பூம்புகார் விற்பனை நிலையம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது. இதனையடுத்து கார்த்திகை மாதம் தீபம் பண்டிகையை முன்னிட்டு விளக்கு திருவிழா கண்காட்சி பண்டிகையை துவங்கி உள்ளது. இக்கண்காட்சி இம்மாதம் 17ம் தேதிவரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.


இக்கண்காட்சியில், பித்தளையில் காமாக்ஷி தீபம், நந்த தீபம், மலபார் தீபம், அஷ்டோத்திர தீபம், லக்ஷ்மி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தெலுங்கு விளக்கு, பாலாடை விளக்கு, லக்ஷ்மி தாமரை விளக்கு, அடுக்கு தீபம், குபேர தீபம் போன்ற இன்னும் ஏராளமான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.

இது குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில்;

பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விளக்கு திருவிழா கண்காட்சியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.  கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 70 சதவீதத்திற்கும் மேல் வந்துள்ளனர். இந்த ஆண்டு விளக்கு திருவிழாவில் ரங்கநாதர் பித்தளை விளக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.



மேலும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அனைத்தும் தரமுடையதாக இருப்பதால், பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாங்கி செல்கின்றனர். வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூபாய் 15 லட்சம் வரை விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...