தமிழகத்தின் முன்னால் முதல் அமைச்சரும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும், பொதுமகளும் இர்ங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாநகர 66வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையத்தை அடுத்த காந்தி நகர் பகுதியில் தி.மு.க சார்பில் நேற்று மாலை 7 மணியளவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் சேரலாதன் தலைமையில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.



