வால்பாறைக்கு உட்பட்ட சின்கோனா, சிறுகுன்றா, நல்லமுடி, பன்னிமேடு மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகள், பள்ளிக்கூடம், சத்துணவுக்கூடம், ரேஷன்கடை, மளிகைக்கடை, டீ கடை ஆகியவற்றை இரவு நேரங்களில் இடிப்பதும், பொருட்களை சேதப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது.

சிலசமயங்களில் பகல் நேரங்களிலேயே காட்டுயானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்துவிடும். இந்நிலையில் நேற்று கேரளா எல்லைப் பகுதியில் உள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டன.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்றும் யானைகளை இடையூறு செய்ய வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலசமயங்களில் பகல் நேரங்களிலேயே காட்டுயானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்துவிடும். இந்நிலையில் நேற்று கேரளா எல்லைப் பகுதியில் உள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டன.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்றும் யானைகளை இடையூறு செய்ய வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.