வர்தா புயல்; அரக்கோணத்தில் இருந்து சென்னை விரைந்துள்ளது பேரிடர் மீட்பு குழு

அதிதீவிர, 'வர்தா' புயல் சென்னை அருகே நாளை மதியம் கரையை கடக்க உள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு, 50 பேர் என, ஐந்து குழுக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்க கடலில் உருவான, 'வர்தா' புயல், இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல், தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை இடையே நாளை மதியம் கரையை கடக்க கூடும். அப்போது மணிக்கு, 70 கி.மீ., முதல், 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...