லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி


கோவை எல்&டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். ஒரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை வெள்ளலூர்  பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜீவா. இவரது மனைவி ஜெபா, ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா ஆகியோருடன் இன்று பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற ஜீவா, மத பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோவை வெள்ளலூர் திரும்பினார். 

அப்போது சித்ரா என்ற உறவுக்கார பெண்ணையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவை திரும்பினார். கோவை எல்&டி புறவழிச்சாலை அருகே கஞ்சிகோணாம்பாளையம் என்ற பகுதி வழியாக வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா உள்ளிட்ட மூவரும் பலியானார்கள். சித்ரா என்ற பெண் மட்டும் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து போத்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...