துப்புரவு தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

கோவையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் கடந்த சனிக்கிழமை கக்கன் நகர் பகுதியில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாரிமுத்து துப்புரவு தொழிலாளி கனகராஜினை தாக்கிதாக கூறப்படுகின்றது. இதில் காயமடைந்த கனகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், இதுவரை கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.



இந்நிலையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது துப்புரவு தொழிலாளி கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தினரை கலைந்துபோக சொல்லி காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் காவல் நிலையம் முன்பாக இருந்து போக மறுத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...