ஜெயலலிதாவின் மகள் என்ற வதந்தியால் மனவேதனையடைந்த திவ்யா குடும்பம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை பெருத்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் மறைந்த ஜெயலலிதாவின் உண்மை மகள் இவர்தான் என திவ்யா ராமநாதன் வீரராகவன் என்ற பெண்ணின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போலவே தோற்றமளிக்கும் அந்த பெண் குறித்த புகைப்படங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரும் பலமுறை மறுப்பு தெரிவித்து வெளியிட்ட தகவல்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.

இதுகுறித்து பிரபல பின்னணி பாடகியும், திவ்யா ராமநாதன் வீரராகவன் உறவினருமான சின்மயி ஸ்ரீபதா தற்போது சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இப்புகைப்படத்தில் உள்ள திவ்யா ராமநாதன் வீரராகவன் என்னுடைய உறவினர். இவரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரைக் குறித்து சில காலமாக சமூக பக்கத்தில் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஜெயலலிதாவிற்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை எனது உறவினர்களும், நண்பர்களும் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து இசைக் கலைஞர் வித்வான் வி.பாலாஜி வதந்திகுறித்து சமூக வளைதளத்தில் சின்மயி ஸ்ரீபதா பதிவுசெய்த கருத்தை பகிர்ந்தார். மேலும் அந்த பதிவில், இத்துடன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என நம்புவதாகவும், இதனால் அந்த பெண்ணின் குடும்பம் ஊடகங்களின் பாரவையில் இருந்து தப்பும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...