வங்கக்கடலில் மையம் கொண்ட வர்தா புயல் மெல்ல மெல்ல சென்னையை நோக்கி நகர்ந்து தற்போது கரையை கடக்க துவங்கியுள்ளாது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. மேலும், ஊருக்குள் கடல் நீர் புகுந்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னைக்கு செல்ல் இருந்த 6 விமானங்கள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புயல் சென்னையை கடக்க குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.