உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் சார்பில் நடைபெற உள்ளது.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் மேலாண்மைத் துறையினர் சார்பில் வருகின்ற டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏழாவது சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கமானது உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது.
சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தான்சானியா நிதித்துறை மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சங்கத் தொழிற்துறையினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன மேலாண்மைத் துறையும் ஒருங்கிணைந்து இந்த சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கானது மூன்று குழு விவாதங்கள் மற்றும் சிறப்புரைகள் கொண்டது. இக்குழு விவாதங்கள் கருத்தரங்கின் தலைப்பின் மூன்று பகுதிகளான முதலீட்டு சூழல், எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சிறந்த நகரங்கள் மற்றும் அதன் சவால்கள், அறிவுசார்ந்த மூலதனம் ஆகியவகைகளின் சிறந்த பங்களிப்பின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் மேம்பாடு அடைவதற்கான வித்துக்களை விதைக்கும் விதத்தில் அமையவிருக்கிறது.
சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வாலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கருத்தரங்கத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்ற உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு துவக்கவுரை ஆற்றவுள்ளார். தான்சானிய நாட்டு துணை தூதரக ஆணையர் முகமது எச். முகமது சிறப்புரை வழங்க உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் மேலாண்மைத் துறையினர் சார்பில் வருகின்ற டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏழாவது சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கமானது உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது.
சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தான்சானியா நிதித்துறை மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சங்கத் தொழிற்துறையினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன மேலாண்மைத் துறையும் ஒருங்கிணைந்து இந்த சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கானது மூன்று குழு விவாதங்கள் மற்றும் சிறப்புரைகள் கொண்டது. இக்குழு விவாதங்கள் கருத்தரங்கின் தலைப்பின் மூன்று பகுதிகளான முதலீட்டு சூழல், எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சிறந்த நகரங்கள் மற்றும் அதன் சவால்கள், அறிவுசார்ந்த மூலதனம் ஆகியவகைகளின் சிறந்த பங்களிப்பின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் மேம்பாடு அடைவதற்கான வித்துக்களை விதைக்கும் விதத்தில் அமையவிருக்கிறது.
சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வாலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கருத்தரங்கத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்ற உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு துவக்கவுரை ஆற்றவுள்ளார். தான்சானிய நாட்டு துணை தூதரக ஆணையர் முகமது எச். முகமது சிறப்புரை வழங்க உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.