அவினாசிலிங்கம் பல்கலை சார்பில் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம்

உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் சார்பில் நடைபெற உள்ளது.



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் மேலாண்மைத் துறையினர் சார்பில் வருகின்ற டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏழாவது சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கமானது உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது. 

சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தான்சானியா நிதித்துறை மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சங்கத் தொழிற்துறையினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன மேலாண்மைத் துறையும் ஒருங்கிணைந்து இந்த சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கானது மூன்று குழு விவாதங்கள் மற்றும் சிறப்புரைகள் கொண்டது. இக்குழு விவாதங்கள் கருத்தரங்கின் தலைப்பின் மூன்று பகுதிகளான முதலீட்டு சூழல், எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சிறந்த நகரங்கள் மற்றும் அதன் சவால்கள், அறிவுசார்ந்த மூலதனம் ஆகியவகைகளின் சிறந்த பங்களிப்பின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் மேம்பாடு அடைவதற்கான வித்துக்களை விதைக்கும் விதத்தில் அமையவிருக்கிறது.

சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வாலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கருத்தரங்கத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்ற உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு துவக்கவுரை ஆற்றவுள்ளார். தான்சானிய நாட்டு துணை தூதரக ஆணையர் முகமது எச். முகமது சிறப்புரை வழங்க உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...