மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சிக்குட்பட்ட மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மற்றும் மக்கும் குப்பைகளை  அந்தந்த நிறுவனங்களே சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத குப்கைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கோவை மாநகராட்சி மற்றும் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் அனைத்து குடியிருப்புகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறக் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தளங்கள், விளையாட்டு மைதானங்கள், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சந்தை சார்ந்த சங்கங்கள் சேகரம் செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

மேலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் மேற்கண்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மேலும், மக்கும் குப்பைகளை அந்தந்த நிறுவனங்களே தமது சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை 2017 மார்ச் 31ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும். 

மேற்படி பணிகளை மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப உதவிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கோவை மாநகராட்சியை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...