புத்தாண்டை வரவேற்று அதிவேகமாக வாகனங்கள் ஓட்டும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகையில் தண்டனை வழங்க முடிவு



புத்தாண்டு துவக்கத்தின் போது இளைஞர்கள் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டுவர். இதன் மூலம் அவர்கள் தங்களது மகிழ்ச்சினை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். ஆனால், அவ்வாறு சாலையில் விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் போதும் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் பல நூறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில்கொண்டு கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வரும் புத்தாண்டிற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதில், புத்தாண்டை முன்னிட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அமரவைக்கப்படுவர்.

பின், அவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் புதுவிதமாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ள மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள், 94981 76444 என்ற தொலைபேசி எண்ணில் கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் அனிதா-வை தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...