கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும் பெண்கள் அமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும் 2017 ஜனவரி 3 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும்.
இப்பயிற்சிக்கான ஏற்பாட்டில் என்.எஸ்.டி.இ.டி.பி, டி.எஸ்.டி மற்றும் இ.டி.ஐ ஆகியவையும் பங்கெடுத்துள்ளன. 25 நாட்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியானது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சியில், தொழில்முனைவோர், தற்போதைய நிலை, தொழில் முனைவோர்களுக்கான நிதி ஆதாரங்கள், திட்டத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைநிலை கண்டறிதல், தொழில் நிர்வாகம், பல்வேறு வரிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதில், 18 வயது 40 வயது வரை உள்ள பி.எஸ்சி, பி.டெக், பிஇ மற்றும் தொழில்நுட்ப பாடம் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிபெற விருப்பமுள்ளவர்கள் தங்களது தகவல்களை [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும்.
இப்பயிற்சிக்கான ஏற்பாட்டில் என்.எஸ்.டி.இ.டி.பி, டி.எஸ்.டி மற்றும் இ.டி.ஐ ஆகியவையும் பங்கெடுத்துள்ளன. 25 நாட்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியானது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சியில், தொழில்முனைவோர், தற்போதைய நிலை, தொழில் முனைவோர்களுக்கான நிதி ஆதாரங்கள், திட்டத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைநிலை கண்டறிதல், தொழில் நிர்வாகம், பல்வேறு வரிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதில், 18 வயது 40 வயது வரை உள்ள பி.எஸ்சி, பி.டெக், பிஇ மற்றும் தொழில்நுட்ப பாடம் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிபெற விருப்பமுள்ளவர்கள் தங்களது தகவல்களை [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும்.