கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பகாவி தலைமை தங்கினார். மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார்.



இக்கூட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ரபீக் அகமத், அஜ்மத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீத், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக், விம் மாநில தலைவி நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-விற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்கொள்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பண மாற்று நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமளிக்க கூடாது. எஸ்.டி.பி.ஐ-யின் கட்சி வளர்ச்சி நிதி திரட்டப்பட உள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பளிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...