எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பகாவி தலைமை தங்கினார். மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார்.

இக்கூட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ரபீக் அகமத், அஜ்மத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீத், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக், விம் மாநில தலைவி நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-விற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்கொள்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பண மாற்று நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமளிக்க கூடாது. எஸ்.டி.பி.ஐ-யின் கட்சி வளர்ச்சி நிதி திரட்டப்பட உள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பளிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ரபீக் அகமத், அஜ்மத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீத், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக், விம் மாநில தலைவி நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-விற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்கொள்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பண மாற்று நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமளிக்க கூடாது. எஸ்.டி.பி.ஐ-யின் கட்சி வளர்ச்சி நிதி திரட்டப்பட உள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பளிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.