மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரங்கல் ஊர்வலம்செவ்வாயன்று துடியலூர் ஐடிஐ முன்பு இருந்து துவங்கி, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு வரை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்விற்கு சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் முன்னிலை வகித்தார். மேலும், இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூனன், மாவட்ட தலைவர் கருப்புசாமி, கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க தலைவர் பால்ராஜ், செயலாளர் நெடுமாறன், பொருளாளர் தங்கவேலு, துணைத் தலைவர்கள் முத்தையா, ஜெயக்குமார், துணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, சந்திரசேகர், இணைச் செயலாளர்கள் மனோகரன், பிரபு, சுவுந்தர், ஜெயக்குமார், செல்வகுமார், பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் தொழிற்சங்க ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
