கோவை மாவட்டத்தில் "மை ஷாப்பிங் மை பேக்'' திட்டத்தின் மூலம் துணிகளைக் கொண்டு பைகள் தயாரிப்பது குறித்த இரண்டாம் கட்டப் பயிற்சி கோவை புரூக் பீல்டு வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பழைய துணிகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத பைகள் தயாரிப்பது எவ்வாறு என பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று துணிகளால் பைகளை தயாரித்தனர். இதில் பங்கேற்ற துர்கேஷ் நந்தினி பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.

இந்த பயிச்சி வகுப்பின் நோக்கமானது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிய அளவில் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகவும் பலகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இப்பயிற்சியானது நகரத்திற்கும், மக்களுக்கும் சுற்றுச் சூழலை பாதுகாப்பாக மேம்படுத்த உதவும்.

இந்தப் பயிற்சியில் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று துணிகளால் பைகளை தயாரித்தனர். இதில் பங்கேற்ற துர்கேஷ் நந்தினி பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.

இந்த பயிச்சி வகுப்பின் நோக்கமானது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிய அளவில் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகவும் பலகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இப்பயிற்சியானது நகரத்திற்கும், மக்களுக்கும் சுற்றுச் சூழலை பாதுகாப்பாக மேம்படுத்த உதவும்.