"மை ஷாப்பிங் மை பேக்'' திட்டத்தின் மூலம் துணிகளைக் கொண்டு பைகள் தயாரிப்பது குறித்து இரண்டாம் கட்டப் பயிற்சி

கோவை மாவட்டத்தில் "மை ஷாப்பிங் மை பேக்'' திட்டத்தின் மூலம் துணிகளைக் கொண்டு பைகள் தயாரிப்பது குறித்த இரண்டாம் கட்டப் பயிற்சி கோவை புரூக் பீல்டு வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பழைய துணிகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத பைகள் தயாரிப்பது எவ்வாறு என பயிற்சிகள் வழங்கப்பட்டது. 



இந்தப் பயிற்சியில் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று துணிகளால் பைகளை தயாரித்தனர். இதில் பங்கேற்ற துர்கேஷ் நந்தினி பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.



இந்த பயிச்சி வகுப்பின் நோக்கமானது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிய அளவில் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகவும் பலகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இப்பயிற்சியானது நகரத்திற்கும், மக்களுக்கும் சுற்றுச் சூழலை பாதுகாப்பாக மேம்படுத்த உதவும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...