தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் குளோபல் கேர் சென்டர் திறப்பு விழா

உலகிலுள்ள வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இத்தகைய காலகட்டத்தில் மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகின்றது.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாசுபட்ட இடத்தை சரிசெய்தலுக்கான சர்வதேச மாநாடு "இந்தியாவை தூய்மைப்படுத்தல் 2016" என்ற பெயரில் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையமும், நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றது.

இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக சர்வதேச சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான மையம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படுகின்றது. சர்வதேச கூட்டமைப்பான இந்த மையம், ஒவ்வொரு தனிமனிதனையும், அரசாங்கத்தையும், அறிவியலையும், தொழில்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் வழிநடத்துவதோடு, ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கவும் உறுதுணையாக அமைகிறது. 

உலக அளவில் மாசுபாட்டைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளையும் வகுத்து, மாசு கலப்படத்தைத் தவிர்த்துப் பசுமை உற்பத்தி கோட்பாட்டினை மேம்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது. 

இந்த மையத்தின் நோக்கமானது, மனிதனால் விளையும் மாசு கலப்படத்தினைக் குறைக்க, புதிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள, நவீன மதிப்பீட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்க, நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளையும் மேம்படுத்த, தலைசிறந்த வல்லுனர்களிடையே தகவல்களைப் பரிமாற்றம் செய்ய ஓர் உலகளாவிய இணையமாக விளங்குவதே ஆகும்.

மேலும், இந்த மையம் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிவுப் பகிர்விற்கு வழிவகுப்பதோடு மாணவர்களின் ஆய்வுகளுக்கும் தொழில் துறையின் மாசுபாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரை செய்யவும் பயனுள்ளதாக அமையும். இந்த அமைப்பானது தூய்மைமிகு சர்வதேச இணக்க நிலையைத் தனிநபர், அரசாங்கம், தொழில்துறை, சமூக அமைப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிடையே உருவாக்கும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...