இடமாற்றம் செய்யப்படும் தனியார் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை


கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டைமேக்ஸ்சன் டைமண்ட் செயற்கை வைரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் 2 தொழிற்சாலைகளும் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒன்றும் உள்ளது.

இதில், கண்ணம்பாளையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த தொழிற்சாலை ஊழியர்கள் இனி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பணிபுரியுமாறு ஆலை நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டால் பணிபுரியும் அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் அதிக பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலமையினை நிர்வாகம் உருவாக்குவதாகக் கூறி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆலை நிர்வாகத்தினரை தொழிலாளர் நல அலுவலகம் அழைத்து இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...