மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்தில் உள்ள அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அந்த குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, வடக்கு மண்டலம், வார்டு எண்- 44, நல்லாம்பாளையம் சாலை, அன்னையப்பன் வீதியில் பிரியா குடிநீர் சப்ளை நிறுவனம் குடிநீர் திருடுவதாக ராமசாமி நகர் 2 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் அப்பதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறைகேடாக அனுமதி பெறாமல் தண்ணீர் திருடிவருவது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் என்.சண்முகம் என்பவர் இரண்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டர் பொருத்தி தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது உறுதியானதையடுத்து, வீட்டு உபயோகத்திற்காக இணைப்பு பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தியதால் இரண்டு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சாலையின் குறுக்கே குழாய் பதித்து குடிநீர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய குழாயும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...