500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் தொடரும் மக்களின் சிரமங்கள்



மத்திய பாஜக அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாயினை மாற்றவும், புதிய ரூபாயினை பெறவும் பெருத்த சிரமத்தினை அன்றாடமும் சந்தித்து வருகின்றனர். 

வங்கிகளிலும், ஏடிஎம் மையங்ளிலும் போதிய பணம் இல்லாததால் பல ஏடிஎம் மையங்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒரு சில ஏடிஎம் மட்டும் திறக்கப்பட்டிருந்தாலும் அதில் நூற்றுக்கணக்கான மக்கள் அலைமோதி வருகின்றனர்.

பொதுமக்கள், தங்களது அன்றாட செலவுகளுக்குக் கூட வழியில்லாமல், அலுவலகம் உள்ளிட்ட தங்களது பணிக்குச் செல்லாமல் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமை என அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் பணமின்றி மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, இன்று வங்கி மற்றும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் ஏடிஎம் மையத்தில் குவிந்தனர்.





அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலக வங்கியில் ஏராளமான மக்கள் காலை முதலே குவியத்துவங்கினர். வங்கி அலுவலகத்தின் உள்ளே ஏற்பட்ட கூட்டநெரிசலைத் தொடர்ந்து மக்கள் வரிசையாக அந்த வங்கியில் இருந்து சாலை வரையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...