வர்தாவின் ஆவேசத்திற்கு உதகையும் தப்பவில்லை..!


வர்தா என்னும் புயல் கடந்த திங்களன்று சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றுடன் மழையும் வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இதனால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை தற்போது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

இந்நிலையில், தற்போது, வர்தா புயலைப் போலவே பலத்த காற்றுடன் நீலகிரியிலும் மழை பெய்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கிப்போனது.



நீலகிரி செல்லும் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே மரப்பாலம் பகுதியில் பழமையான மரம் ஒன்று வேருடன் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மேலும், மரம் விழுந்ததைத்தொடர்ந்து, மண் சரிவும் ஏற்பட்டதால் சாலையில் பாறைகளும் விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் காயமின்றி உயிர்தப்பினர். 



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் விரைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...