கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பணமில்லா பரிவர்த்தனை கருவிகள் அறிமுகம்


ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பினை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக முன்பதிவு மையத்தில் 3 புதிய கருவிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ரயில்நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதில் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு பெறும் மையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக புதிய கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கடன் அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதற்காக ஒரு இயந்திரம் செயல்பட்டு வந்த சூழலில் தற்போது மேலும் இரண்டு கருவிகள் மூலம் ரயில்வே நிர்வாகம் சேவையை துவங்கியுள்ளது.

இதனால் சில்லரைக்காக ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்பதால் அதனை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறுவதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் சாதாரண பயண சீட்டு வழங்குமிடத்திலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் மூத்த குடிமகன்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது கோவை ரயில்நிலையத்தில் முன்பதிவு மையத்தில் உள்ள 10 கவுண்டர்களில் 4 மட்டுமே இயங்கி வருவதும் சாதாரண பயணச்சீட்டு வழங்குமிடத்தில் 3 கவுண்டர்கள் மட்டுமே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...