மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்க்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது, இந்நிலையில், கடந்த இரு தினங்களாக உதகை, நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஹில்கிரோ என்னும் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகளும் ரயில் பாதையில் விழுந்துள்ளதால் அதனை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர்க்கான ரயில் சேவையை இன்று ஒரு நாள் ரத்துசெய்து ரயில்வே நர்வாகம் அறிவித்துள்ளது.