பாரதியார் பல்கலை சார்பில் தென் மண்டல பல்கலைக் கழகங்களிடையிலான மகளிர் கபடி போட்டி துவக்கம்


பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித் துறை 2016-ஆம் கல்வி ஆண்டின் தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மகளிர் கபடி போட்டியை நடத்துகிறது. இதில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 54 பல்கலைக கழகங்கள் பங்கேற்கவுள்ளன.



டிசம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிக்கான துவக்கவிழா புதனன்று பாரதியார் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், பேராசிரியர் முனைவர் ஏ.கணபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி பேசியதோடு பல்வேறு பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏறறுக்கொண்டார்.



இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் முன்னாள் இந்திய கபடி வீரர் அர்ஜூனா விருதுபெற்ற பி.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.

உடற்கல்வித் துறை தலைவர் மற்றும் இந்த போட்டியின் அமைப்புச் செயலருமான முனைவர் கே.முருகவேல் வரவேற்றுப் பேசினார். இணை செயலாளர் முனைவர் ஜி.குமரேசன் மற்றும் முனைவர் பி.முருகேஷ்வரி ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கான மகளிர் கபடிப்போட்டிகள் பல்கலைக் கழக விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...