தமிழக அரசின் பல்வேறு பிரிவில் பணிபுரிவோர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்




கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அலுவலர் அடிப்படை சிறப்பு பயிற்சி மையத்தில் இன்று அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமணம் செய்யப்படும் இளநிலை உதவியாளர்கள், நேரடி உதவியாளர்கள், தட்டச்சர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று உதவியாளர்களாக பணிபுரிபவர்கள், கருணை அடிப்படையில் நியமனம் பெறும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தற்சமயம், தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதால், அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதால் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் 9723 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

கோவை பயிற்சி மையமானது பெண்களுக்கான சிறப்பு பயிற்சி மையமாகும், இப்பயிற்சி வகுப்புகள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 243 அலுவலர்கள் கொண்ட முதல் அணிக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கி தொடர்ந்து 37 நாட்கள் என வரும் டிசம்பர் 2017 ஜனவரி 28ம் தேதியன்று நிறைவடையும். அடுத்தடுத்த அணிகளுக்கு இவ்வகுப்புகள் தொடர்ந்து ஜனவரி 2018 வரையில் நடைபெறும். 

இவ்வகுப்பில் அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொது மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, கணக்குகள் ஆகிய பாடதிட்டங்களின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்குமிட வசதி மற்றும் அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்டவைகளும் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகுப்பினால் பணி குறித்த பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், உடலளவில் மேம்படும் வகையிலான உடற்பயிற்சி வகுப்புகளும், உள்ளத்தினால் மேம்பட இறைவணக்கம் மற்றும் யோகா வகுப்புகளும் நடைபெறுகிறது. கடந்த முறை 2014 முதல் 2016 வரை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் 8 அணிகள் மூலம் 1650 பெண் பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்பினை அனைவரும் சிறந்த முறையில் கற்று தங்களது பணித்திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர் அடிப்படை சிறப்பு பயிற்சி மைய முதல்வர் மு.பாலச்சந்திரன், விரிவுரையாளர்கள் மு.சாமியப்பன், நரசிம்மன், கண்கானிப்பாளர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...