பி.எஸ்.என்.எல் டவர்களை பிரித்து துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் டவர்களை பிரித்து துணை நிறுவனம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பி.எஸ்.என்.எல்நிறுவனத்தின் மொபைல் டவர்களைப் பராமரிக்க ஒரு துணை நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு ஒருகுறிப்பு அனுப்பியுள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 65000 மொபைல் டவர்களும் புதிய துணை டவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த முயற்சியை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பதால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில், டவர் மூலமான வர்த்தகம், மிக லாபகரமான வர்த்தகமாகும். ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது டவர்கள் மூலம் முழுமையாக பலன் பெறவும், அதிகபட்ச லாபமீட்டவும் முடியவில்லை. ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், நிர்வாகம் டவர் வர்த்தகத்தில் கவனம் செலுத்தவும், டவர்களை மிகத்திறமையாக நிர்வகிக்கவும், அதிகபட்ச லாபம் ஈட்டவும் முடியும்.

தனது அதிகமான தேய்மான செலவினால், பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2015- 16 ஆம் ஆண்டில், தேய்மான தொகை ரூ.8816 கோடியாகும். துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், இந்தத் தேய்மானத்தின் பெரும் பகுதி துணை நிறுவனத்தின் கணக்குக்குள் சென்றுவிடும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. 

மத்திய அரசின் ஆலோசனையின்படி, தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு துணை டவர் நிறுவனம் இயங்கவுள்ளது. துணை டவர் நிறுவனத்தில், அதிக லாபமீட்டக் கூடிய வர்த்தகத்தை அவர்கள் செய்ய முடியும் என்றால், அதை துணை டவர் நிறுவனம் இல்லாமலேயே அவர்களால் செய்யமுடியும். மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவன விரோத – தனியார் ஆதரவு கொள்கைகளால்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டமடைந்துள்ளது. 

தேய்மானம்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்துக்குக் காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. 2016- செப்டம்பருக்கு முன்பான ஆறு மாதங்களில், ஐந்து மாதங்கள் நாட்டின் அதிகபட்ச மொபைல் இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம் தான் வழங்கியுள்ளது. ஏற்கனவே, 3854 கோடி ரூபாய், செயலாக்க லாபத்தை நிறுவனம் ஈட்டிவிட்ட நிலையில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுவதை எதிர்த்து இன்று (வியாழன்) நாடு முழுவதும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...