விவசாயிகளுக்கு வன உயிர்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் - விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்


கோவை, வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டம் கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வனசரக  அலுவலர் எம்.நசீர் வரவேற்புரை வழங்கினார்.



இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வனவிலங்குகள் பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களை வன அலுவலர்கள் முன் வைத்தனர். குறிப்பாக யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டு எருமைகள், மான்கள், மயில்கள், குரங்குகள் போன்றவற்றை வனத்திலிருந்து வெளியே வந்து பயிர் சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறதாக கலந்தாய்வுக் கூட்டத்தில் கூறப்பட்டது.






பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய கருத்துக்களை கூறுகையில்:-



விவசாயிகளுக்கு வன உயிர்களால் ஏற்படும் மரணத்திற்கு அரசாங்கம் மனித உயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறது. மேலும் விவசயிகள் பயிரிடப்படும் விளைநிலங்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. அரசு அலுவலர்களால் விவசாயிகள் இழப்பீடு பெறுவது பெரும் சிரமப்படுகின்றனர் . இதற்கு அரசாங்கம் விவசாயிகளின் அக்கறையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் விவசாயிகளின் வீட்டிற்கு நேரடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 

மனிதர்களால் காட்டுக்குள் இருக்கும் விலங்குகளுக்கு ஆபத்து இல்லை. மாறாக காட்டு விலங்குகளால்தான் மனிதர்கள் வாழும் இடத்திற்கும் மனிதர்களுக்கும் ஆபத்து. இந்த உண்மைக்குப் புறம்பாக யானைகளுக்கு வழித்தடம் இருப்பதாகவும் அதை மனிதர்கள் தடுப்பதாகவும் இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, தடாகம், கோவனுர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கண்டியூர் போன்ற அனைத்து மலை கிராமங்களிலும் பல நூறு வருடங்களாக எந்த பிரச்சனைகளும் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால், கடந்த 10 வருடங்களாகத்தான் இந்தப்பிரச்சனை வந்துள்ளது. வன விலங்குகள் சாப்பிடாத வகையில் பயிரிடுமாறு அறிவுரை சொல்கின்றனர். இந்த நிலை நீடித்தால் சிறுதானியங்களை, பருப்பு வகைகளையும் கண்ணால் கூட பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். நாட்டு மக்கள் நலன் முக்கியமா? அல்லது காட்டு விலங்குகள் நலன் முக்கியமா? என்று அரசாங்கம் கூற வேண்டும்.

யானைகளை கொன்றால், விவசாயிகளின் மேல் வழக்கு பதிவு செய்கிறார்கள். யானை மனிதனைக் கொன்றால் வன இலாகாவின்மேல் வழக்கு பதிவு செய்வதே இல்லை. ஒரு சில வடமாநிலங்களிலும், கேரளாவிலும் பன்றிகளை சுடுவதற்கு, யானைகளை ரப்பர் குண்டுகளால் சுட்டு விரட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் விவசாயிகள் கஷ்டமும், நஷ்டமும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இவ்வாறு வன அலுவலர்கள் முன்பு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.



இதில், மத்திய கூட்டுறவு தலைவர் சக்திவேல், தமிழ்நாடு விவசயிகள் சங்கம் தலைவர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க தலைவர் வழுக்குப்பாறை பாலு, மாவட்ட வன அலுவலர்கள், வனப்பாதுகாப்பாளர்கள், கோவை மாவட்ட விவாசயிகள், தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...