கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சுவர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் காணப்பட்டது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பெருத்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியும், தூய்மை இந்தியா திட்ட அமைப்பினரும் இணைந்து அந்த சுவற்றின் பகுதிகளை சுத்தம் செய்து, தொடர்ந்து மீண்டும் அதனை சீர்கேடடையச் செய்யமால் இருக்க தூய்மை இந்தியாவுக்கான சுவர் படங்களையும், அதன் வாசகங்களையும் வரைந்துள்ளனர்.

மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் இப்பணிகளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.