சுகாதார சீர்கேடாக காட்சியளித்த சுவற்றினை சுத்தம் செய்த தூய்மை இந்தியா மற்றும் கோவை மாநகராட்சி


கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சுவர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் காணப்பட்டது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பெருத்த சிரமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியும், தூய்மை இந்தியா திட்ட அமைப்பினரும் இணைந்து அந்த சுவற்றின் பகுதிகளை சுத்தம் செய்து, தொடர்ந்து மீண்டும் அதனை சீர்கேடடையச் செய்யமால் இருக்க தூய்மை இந்தியாவுக்கான சுவர் படங்களையும், அதன் வாசகங்களையும் வரைந்துள்ளனர்.

 



மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் இப்பணிகளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...