ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து கருத்தரங்கம்


தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை ஒருநாள் கருத்தரங்கம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் தொழில்நுட்ப பிரிவும், தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் இணைந்து நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், தென்மண்டல பேரிடர் மேலாண்மை வாரியத்தின் பயிற்சி அதிகாரி ஜி.ஆறுமுகம் பங்கேற்று பேரிடர், தற்காப்பு, மறுவாழ்வு குறித்தும், சுனாமி, வெள்ளப்பெருக்கு, தீவிபத்து உள்ளிட்ட காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ''பூமியின் சுழற்சியிலும், கால மாற்றத்தினாலும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. மனித வாழ்வின் அத்தனை அம்சங்களையும் பாதிக்கும் இதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இந்த பேரிடர்களை எதிர்கொள்ள நம்மை தயார்செய்துகொள்ள முடியும்.



இந்திய அரசு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான குழுக்களை அமைத்துள்ளது. மேலும், இந்தக் குழு மக்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளையும் வழங்கும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, பேரிடர் காலங்களில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளும், செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், சிவில் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஐ.பத்மநாபன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...