கோவை மாவட்டம், அவினாசிலிங்கம் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவிகள் சார்பில் கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆதார் உள்ளிட்ட அட்டைகளை பெற்றுத்தர திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில், அவினாசிலிங்க பல்கலையின் என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவிகள் சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தெற்குபாளையம், ரங்கம்மாள் காலனி, சுப்ரமணியாம்பாளையம், தொண்டாமுத்தூர், குருடம்பாளையம் பஞ்சாயத்து, வடமதுரை, தொப்பம்பட்டி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், சோமயம்பாளையம், நல்லாம்பாளையம் II, தென்னம்பாளையம், புதுபாளையம், நல்லாம்பாளையம் காந்தி நகர், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்களிடம் தகவல்களை பெற்று அதனை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த உதவியின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை கிராம மக்களும் பெற்று பயனடைய முடியும் என அப்பகுதி மக்கள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில், அவினாசிலிங்கம் பல்கலையின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் எஸ்.கௌசல்யா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் கிராம மக்களிடம் பெயர், வயது, வருமானம், பான் அட்டை விபரம் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்தனர்.