இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விசாரணை" திரைப்படம் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான விருதான "ஆஸ்கர் விருது" வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் "விசாரணை" தமிழ்ப் படம் தேர்வாகியது.
இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான "ஆஸ்கர்" விருது போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ள நிலையில், விசாரணை திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாக போட்டியிட்டது தமிழ் சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் போட்டியில் இருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான விருதான "ஆஸ்கர் விருது" வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் "விசாரணை" தமிழ்ப் படம் தேர்வாகியது.
இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான "ஆஸ்கர்" விருது போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ள நிலையில், விசாரணை திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாக போட்டியிட்டது தமிழ் சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் போட்டியில் இருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.