ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறிய "விசாரணை" திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விசாரணை" திரைப்படம் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான விருதான "ஆஸ்கர் விருது" வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் "விசாரணை" தமிழ்ப் படம் தேர்வாகியது.

இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான "ஆஸ்கர்" விருது போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ள நிலையில், விசாரணை திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாக போட்டியிட்டது தமிழ் சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் போட்டியில் இருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...