இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி



கோவை துடியலூர் அருேக வட்டமலைபாளையத்திலுள்ள இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக தொழில் முனைவோர் சந்திப்பு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமை ஏற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாந்தினி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அலமேலு  விழாவின் முக்கியத்துவத்தை கூறினார். கல்வியியல் துறை இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார் .



விழாவில் பெங்களூர் பியுல்லாட்ரிம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கநாத் தோட்டா பேசுகையில்; தொழில் முனைவோர் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகளை தன் அனுபவத்தின் மூலம் திறம்பட பட்டியலிட்டு நேர்மை, விடாமுயற்சி, ஈடுபாடு, பொருளாதார கொள்கைகள், உலகளாவிய பொருளாதார நிலைப்பாடு, ஒரு தொழில் முனைவோரிடம் ஏற்படுத்தும் தாக்கத்தினையும், அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். 

மேலும் விழாவிற்கு கோவை மில்டக்ஸ் இன்ஜினியரிங், ஸ்டிேரா இ -பைக், நிர்வாக இயக்குநர் மணிகண்டன் மற்றும் கோவை கேசவ் இன்னோவேஷன் செல்யுசன்ஸ் இயக்குநர் கார்த்திகேயன் ஜவஹர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்களுடைய  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு கல்லூரியில் கடந்த 18 வருடங்களில் படித்து, தொழில் முனைவோர்களாக பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் சுமார் 75 பேர் தங்கள் படைப்புகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பம்சமாகும். இச்சந்திப்பின் போது கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்கள்  தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர் சிறந்த படைப்பிற்கு ஊக்க பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...