500, 1000 ரூபாய் தடையால் வேலையிழந்த தங்கநகைத் தொழிலாளி தற்கொலை

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் வேலையில்லாத காரணத்தால் கோவையில் தங்கநகை தொழிலாளி தற்கொலை செய்து உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மா.ந.க வீதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அப்பகுதியில் தங்க சங்கிலிகளை கட்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்தார். இதனிடையே, மத்திய பா.ஜ.க அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து இவரது தொழிலில் கடந்த சில மாதங்களாக தொய்வு ஏற்பட்ட காரணத்தால் முருகானந்தம் மன உளைச்சலுடன் காணப்பட்டதுடன் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீதேவி குழந்தைகளுடன் ஞாயிறன்று காலையில் வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்தபோது முருகானந்தம் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து முருகானந்தத்தை மீட்டபோது தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வெறைட்டிஹால் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு காரணமாக தற்போது வேலையில்லாத நிலை உள்ளதாகவும், வேலை செய்த கூலி பணத்தை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் முருகானந்தம் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் தங்கநகை உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...