கோவை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி சமூக நீதிக் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சமூக நீதிக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான் பேட்டை, செஞ்சேரி மலை, அன்னூர், கீரணத்தம், கல்லிப்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டைக் குவளை, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, தனி சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைகள் நிலவிவருகிறது. 

இதுகுறித்து கடந்த 10 வருடத்திற்கும் மேலாக புகார் அளித்தும் விசாரிக்க வரும் அதிகாரிகள் கையூட்டுப்பெற்றுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி விடுதி காப்பாளர்கள் சமையல் உள்ளிட்ட செலவுகளில் அரசிடம் கூடுதல் பணம் பெறுகின்றனர். பல விடுதிகளில் காப்பாளர்கள் விடுதிக்கு வருவதே இல்லை. 4 மாணவர்கள் மட்டுமே விடுதியில் உள்ள நிலையில் 60 மாணவர்கள் என கணக்கு காட்டி ஆயிரக் கணக்கில் ஒரு விடுதில் கொள்ளையடிக்கப்படுகிறது.



இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...