பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் சி பி ஐ எம் மனு


பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பின் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து, அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத் தேவைக்காக மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகள் மூலம் மாதாந்திர தவணைக் கடன் பெற்றுள்ளனர்.

குறைந்தபட்சம் 9 பேரிலிருந்து 45 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தனிநபர் ஜாமீன் பெற்று 24 தவணையில் கடன் வாங்கியுள்ளனர். இதில் கடந்த நவம்பர் மாதம் வரை முறையாக தவணைத் தொகை செலுத்திவந்த நிலையில் மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் சிறுசிறு வியாபாரம் மூலம் வருமானம் ஈட்டிவந்த சாமான்ய மக்களின் வருமானம் முடங்கிபோயுள்ளது.

இந்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெறப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத மைக்ரோ பைனான்ஸ் பொறுப்பாளர்கள் பெண்களை மிகக் கேவலமாக திட்டி அவமானப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக "பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து பணம் திரும்ப கிடைத்துவிடும். எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...