கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பல்கலைக் கழக முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பாரதியார் பல்கலை கழக பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் 35 முதல் 60 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறிய பட்டதாரிகள், தகுதியான நபர்களை நியமிக்கவில்லை எனில் தங்களது முனைவர் பட்டத்தை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பாரதியார் பல்கலை கழக பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் 35 முதல் 60 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறிய பட்டதாரிகள், தகுதியான நபர்களை நியமிக்கவில்லை எனில் தங்களது முனைவர் பட்டத்தை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.