வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை


கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், பழனியம்மாளின் பேரனான கருணாகரன் வழக்கம்போல காலை உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்தபோது பழனியம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து கருணாகரன் தனது உறவினர்களுக்கும் இரத்தினபுரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி பழனியம்மாள் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் பழனியம்மாளின் கையில் இருந்த 2 சவரன் மதிப்பிலான தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பழனியம்மாளின் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...