கருப்பு மற்றும் கள்ளபணத்தை ஒழிக்கும் விதமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடு முழுக்க மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் வாயிலாக மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து, கோவையில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதற்காக 4க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோடிக்கணக்கான பணம் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லபட்டது.