தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து நாடு முழுக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து 16-வது நாளான இன்று கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திற்கு உட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலியபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் நல தலைவர் கோவை ஜெயபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து 16-வது நாளான இன்று கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திற்கு உட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலியபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் நல தலைவர் கோவை ஜெயபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.