டிச. 23 முதல் கொடிசியா வளாகத்தில் கோவை சாப்பீங் திருவிழா துவக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் டிசம்பர் 23 முதல் 2017 ஜனவரி 1ம் தேதி வரை கோவை சாப்பீங் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 10 நாள் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 

இக்கண்காட்சியில், வீட்டு அழங்காரப் பொருட்கள், இயற்கை உணவுகள், பரிசுப் பொருட்கள், சூரிய சக்தியால் இயங்கும் கருவிகள், நீர்சுத்திகரிப்பு இயந்திரம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், இக்கண்காட்சியில் 400 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து கோவை சாப்பீங் திருவிழா தலைவர் கே.விஷ்வநாதன் கூறுகையில், கோவையில் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த கோவை சாப்பீங் திருவிழா 2016 ஒரு கருவியாக இருக்கும். கொங்குப்பகுதியில் தொழில் மற்றும் வளர்ச்சியை ஒரு முன்னேற்றுப் பாதையில் எடுத்துச் செல்லும். அதே வேலையில் கோவையில் ஒரு பெருமை மிகு நிகழ்வாக இந்த சாப்பீங் திருவிழா அமையும்'' என்றார்.

மேலும், இந்நிகழ்வில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் நாட்டுப்புர பாட்டு கலைநிகழ்ச்சிகளும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் உணவுக்கு என்று தனி அரங்கும், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கும் அமைக்கப்படவுள்ளது. மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்காக ஏடிஎம் அட்டை பயன்படுத்தும் கருவியும் பொருத்தப்பட உள்ளது.

இதற்கான நுழைவுக் கட்டணம் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.30 ம் வசூழிக்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...