கோவை மாவட்ட ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் அளித்தனர்.
இதில் 15 பேருக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறுகையில், இந்த முகாமின் நோக்கம் சிறந்த கண் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பதாகும். இந்த நிகழ்வில் மக்களுக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்களில் அதிக அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர கண்பார்வை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுகுறித்து எவ்வித அறிகுறியும் தெரியாது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் கண்பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். இம்முகாமின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடிந்தது'' என்றார்.
இதில் 15 பேருக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறுகையில், இந்த முகாமின் நோக்கம் சிறந்த கண் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பதாகும். இந்த நிகழ்வில் மக்களுக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்களில் அதிக அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர கண்பார்வை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுகுறித்து எவ்வித அறிகுறியும் தெரியாது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் கண்பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். இம்முகாமின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடிந்தது'' என்றார்.