கோவை போத்தனூரை அடுத்த சாய் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் 'பேரிலேண்ட் - சாய் அமரந்தா' என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு 130 வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் கலா கூறியதாவது :-
எங்கள் பகுதியின் ஓரத்தில் உள்ள சாலையில் சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தோர் தனியாக குழி தோண்டினர். மேலும், குடியிருப்பின் கழிவுகளை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றில் விட இருப்பதாக கூறினர். இது குறித்து, கோவை மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். புகாரின் பேரில் எங்கள் பகுதி உதவி பொறியாளர் கவிதா அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும்,போத்தனூர் போலீசாரும் வந்தனர். தொடர்ந்து, உதவி பொறியாளர் கவிதா, குடிருப்பு நிர்வாகத்தினர் தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றங்கரை தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இங்கு உள்ள பல வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது போன்று, கழிவு நீரை நொய்யல் நதியில் செலுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் கலா கூறியதாவது :-
எங்கள் பகுதியின் ஓரத்தில் உள்ள சாலையில் சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தோர் தனியாக குழி தோண்டினர். மேலும், குடியிருப்பின் கழிவுகளை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றில் விட இருப்பதாக கூறினர். இது குறித்து, கோவை மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். புகாரின் பேரில் எங்கள் பகுதி உதவி பொறியாளர் கவிதா அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும்,போத்தனூர் போலீசாரும் வந்தனர். தொடர்ந்து, உதவி பொறியாளர் கவிதா, குடிருப்பு நிர்வாகத்தினர் தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றங்கரை தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இங்கு உள்ள பல வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது போன்று, கழிவு நீரை நொய்யல் நதியில் செலுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.