கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்கும் முயற்சி முறியடிப்பு

கோவை போத்தனூரை அடுத்த சாய் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் 'பேரிலேண்ட் - சாய் அமரந்தா' என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு  130 வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.



இது குறித்து சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் கலா கூறியதாவது :-

எங்கள் பகுதியின் ஓரத்தில் உள்ள சாலையில் சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தோர் தனியாக குழி தோண்டினர். மேலும், குடியிருப்பின் கழிவுகளை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றில் விட இருப்பதாக கூறினர். இது குறித்து, கோவை மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். புகாரின் பேரில் எங்கள் பகுதி உதவி பொறியாளர் கவிதா அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.   மேலும்,போத்தனூர் போலீசாரும் வந்தனர். தொடர்ந்து, உதவி பொறியாளர் கவிதா, குடிருப்பு நிர்வாகத்தினர் தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். 



இதை தொடர்ந்து அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றங்கரை தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இங்கு உள்ள பல வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது போன்று, கழிவு நீரை நொய்யல் நதியில் செலுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...