தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டமைப்பு மக்கள் நலக்கூட்டணியாக மாறியதே தவிர இது ஒரு நிரந்தர அமைப்பு இல்லை என திருமாவளவன் தகவல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூடலூரில் நடைபெற உள்ள பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில்,

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிவித்ததின் மூலம் கருப்பு பணம் இரட்டிப்பாக மாறி உள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள மாநாட்டில் ஒருமித்த கருத்து உள்ள இடத்து சாரி கட்சி தலைவர்கள் பங்கேற்பதாகவும், பணவிவகாரம் தொடர்பாக பிரதமரின் கருத்தை ஆதரிக்கும் மதிமுக பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக வைகோவிடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும் இது மக்கள் நலக் கூட்டணியில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். மக்கள் நலக் கூட்டமைப்பு நிரந்தமில்லை என டி.கே.ரங்கராஜன் தெரிவித்த கருத்தை ஆமோதித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து போராட மக்கள் நலக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டதாகவும், தேர்தலுக்காக அது மக்கள் நலக் கூட்டணியாக மாறியதே தவிர இது நிரந்தர கூட்டமைப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், மக்களின் பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்று கூடுவோம் எனவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிகட்டு தொடர்பாக திமுகவின் அனைத்து கட்சி போராட்டம் தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளது குறித்து தனக்கு தகவல் வரவில்லை எனவும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நீதிமன்ற நடவடிக்கையும் தாண்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

பொது சிவில் ஷரியத் சட்டம் இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. பாஜக அரசு வேண்டும் என்றே இந்த செயல்களில் ஈடுபடுகிறது. இதனை எதிர்க்கும் வகையில் கூடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...