அழகு மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய மருத்துவமனை மையம் துவக்கம்

அழகு மற்றும் சுகாதாரமான ஆரோக்கியத்திற்கான சிகிச்சைக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் மருத்துவமனை மற்றும் சலூன் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது சலூன் மையமாகவும், உடலின் மேற்பரப்பில் அழகு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.



இந்த மையத்தினை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒரே இடத்தில் மேம்படுத்தப்பட்ட சலூன் சேவைகளும், ஒரு முழுவசதிகளுடன் அழகு மையமும் செயல்படுவது இதுவே முதல் முறை. இச்சேவை கோவை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இதன் மூலம் கோவை மக்கள் தங்கள் அழகு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி பயனடைய வேண்டும்'' என்றார்.

பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா கூறுகையில், "எல்லோரும் ஒருமுறையாவது இந்த மருத்துவமனை சேவைகளை பெற வேண்டும். இந்த அழகு மருத்துவமனை அழகு மற்றும் சுகாதார துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

மிர்ஷஸ் யெர்த் 2016 விருது பெற்ற ஜெயா மகேஷ், "இது ஒரு அழகு மற்றும் சுகாதாரத்திற்கு என துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் தங்களது அழகை மெருகூட்டிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.

ஜுவல் ஒன் அன்டு எம்ரால்டு நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்த அழகு மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

எம்எல்ஆர் நிர்வாக இயக்குநர் கேசிஆர் பாலாஜி, ஒரு இடத்தில் அழகு தொடர்பாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...